For Daily Alerts
Just In
பஹ்ரைன்: கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 தமிழர்கள் பலி
பலியான மூவரின் பெயர் முருகேசன் கோனார்(40, சண்முக ஜெகன்னாதன் (25) மற்றும் பால்ராசு அய்யாக்கண்ணு (23) என்பதாகும். இவர்கள் தெற்கு மனாமா பகுதியில் உள்ள அல் ஈகர் கிராமத்தில் உள்ள வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மீத்தேன் விஷவாயு தாக்கியது. இதில் உள்ளே இறங்கியிருந்த ஒருவர் மயங்கி விழுந்தார். அவரைத் தொடர்ந்து இருவரும் மயங்கி உயிரிழந்தனர்.
இந்த தகவல் அரசின் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. செப்டிங் டேங்க் தொட்டியில் இறங்கும் போது பாதுகாப்பாக பொருட்களை அணிந்து கொண்டு பணி செய்ய வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
English summary
Three indian workers died on Tuesday morning in Bahrain, apparently after succumbing to methane gas poisoning, the interior ministry said.
Story first published: Wednesday, July 31, 2013, 13:48 [IST]