For Quick Alerts
For Daily Alerts
Just In
உணவு பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் அவசியம்: ஜெ. வலியுறுத்தல்!
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம் மத்திய அரசின் தன்னிச்சையான முடிவு. இச் சட்டம் மூலமாக அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளபோதும், தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்த சட்டம், உணவுப் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாக அமையும்.
இதனால் பொது விநியாகத் திட்டத்தை ஏற்கனவே செயல்படுத்திவரும் மாநிலங்களுக்கு போதிய உணவு தானியங்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வது, தற்போது வழங்கப்பட்டுவரும் விலையில் உணவு தானியங்களை 3 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்க முடியும் என்ற முடிவை மாற்றியமைப்பது போன்ற திருத்தங்களை மசோதாவில் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
jayalalitha tamilnadu prime minister manmohan singh உணவு பாதுகாப்பு மசோதா தமிழகம் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்
English summary
Tamil Nadu Chief Minister J Jayalalithaa today wrote to Prime Minister Manmohan Singh seeking five amendments to the Food Security Ordinance.
Story first published: Saturday, August 3, 2013, 12:20 [IST]