For Daily Alerts
Just In
பி.ஆர்.பியின் தோட்ட வீட்டில் கொள்ளை முயற்சி... 4 பேர் மடக்கிப் பிடித்துக் கைது
பி.ஆர்.பியின் தோட்ட வீடு வளையங்குளம் பகுதியில் உள்ளது. இந்த வீடு உள்ள பகுதியில், அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் உள்ளிட்ட போலீஸார் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 பேர் தோட்ட வீடு பகுதியில் மறைந்திருந்ததைப் பார்த்தனர்.
அவர்கள் போலீஸாரைப் பார்த்ததும் ஓட முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வில்லாபுரம் முத்து அய்யப்பன், மாரீஸ்வரன், எட்டு ராஜா மற்றும் தல்லாகுளத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்று தெரிய வந்தது.
நான்கு பேரும் பி.ஆர்.பியின் வீட்டில் திருடும் நோக்கோடு பதுங்கியிருந்தது தெரிய வந்தது. இ தையடுத்து நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
Comments
English summary
Police thwarted a theft attempt in PRP's house near Madurai and arrested 4 persons regarding this.
Story first published: Sunday, August 4, 2013, 16:47 [IST]