என்னது நான் பாக். ஏஜென்ட்டா.. ராஜ்யசபாவில் முஷ்டியை உயர்த்தி அடிக்கப் பாய்ந்த மணிசங்கர் அய்யர்!
ராஜ்யசபாவில் நேற்று எதிர்க்கட்சி எம்.பிக்கள், ஆளும் கட்சி எம்.பிக்கள் இடையே வாக்குவாதம் நடடபெற்றது. அப்போது தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில, எம்.பி.,க்கள் இருவர் சபையின் மையப்பகுதியில் முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தனர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்படுவதும் மீண்டும் கூடுவதாகவும் இருந்தது.
அப்போது எல்லையில் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை சமாஜ்வாடி கட்சி எம்.பி., நரேஷ் அகர்வால் எழுப்பினார். அவருடன் மணிசங்கர் அய்யர் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தார்.
இந்த வாதத்தின் போது "நீங்கள் ஒரு பாகிஸ்தான் ஏஜென்ட்," என்று நரேஷ் அகர்வால், மணிசங்கரைப் பார்த்து விமர்சித்தார். இதை எதிர்பார்க்காத மணிசங்கர் கைகளை முறுக்கியபடி என்னைப் பார்த்து இப்படி சொல்ல, உனக்கு என்ன தைரியம் என நரேஷ் அகர்வாலை நோக்கி வேகமாக எழுந்து சென்றார். இதனால் கைகலப்பு ஏற்படக் கூடிய பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
சக எம்.பி.,க்கள் தலையிட்டு இருவரையும் பிரித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் நரேஷ் அகர்வால் அப்படி கூறியது தவறு என்றும் பலரும் அவரிடம் எடுத்துக் கூறினர்.