மும்பை: இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டிகளின் இந்திய தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி தீவிர கால்பந்து ரசிகர். தனது பள்ளி பருவத்தில் கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்து விளையாடியவர். அதன்பின் கிரிக்கெட் பக்கம் சென்றார்.
தற்போது டோனியை இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியின் இந்திய தூதராக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டி.வி நிறுவனம் நியமித்திருக்கிறது. இந்தியாவில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரை பிரபலபடுத்தும் விளம்பரங்களில் அவர் தோன்றுவார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டோனி, கிரிக்கெட் மீது ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் மற்ற விளையாட்டுகளையும் ரசிக்க வேண்டும். இதேபோல் மற்ற விளையாட்டுகளுக்கும் மதிப்பு தர வேண்டும் என்றார்.