For Daily Alerts
Just In
கொள்ளிடம் ஆற்றில் குளித்த மூவர் வெள்ளத்தில் சிக்கி பலி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரியில் பெருமளவு உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளம் கொட்டுகிறது. மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்திருந்த 3 இளைஞர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 3 இளைஞர்களும் உயிரிழந்தனர்.
அந்த 3 இளைஞர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
3 youngsters were drowned in Kollidam flood.
Story first published: Friday, August 9, 2013, 10:36 [IST]