For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜய் ரசிகன் தூக்கிட்டு தற்கொலை - தலைவா வெளியாகாத சோகமாம்!!

By Shankar
Google Oneindia Tamil News

Vijay fan commits suicide
கோவை: தலைவா படம் வெளியாகாததால் விரக்தியில் கோவையைச் சேர்ந்த விஜய்யின் தீவிர ரசிகன் விஷ்ணுகுமார் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர்கள் - உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை, துடியலூரைச் சேர்ந்த ஆனந்தன் மகன் விக்ரம் என்ற விஷ்ணுகுமார் (20). இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்தவர்.

விஜய் இயக்கத்தில், நடிகர் விஜய், அமலாபால் நடித்த தலைவா படம் நேற்று திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகாமல் போனது. தலைவா படத்தைப் பார்க்க ஆவலாய் இருந்த விஷ்ணுவுக்கு ள்ளார். ஆனால் தலைவா படம் வெளியாகவில்லை. இதனால் விஷ்ணுகுமார் மிகவும் மனமுடைந்து போனார்.

நண்பர்களிடம் வருத்தமாகப் பேசிவிட்டு இரவு வீட்டுக்கு சென்ற விஷ்ணுகுமார் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுப்பற்றி அவரது நண்பர்கள் மற்றும் உறவினரிடம் விசாரித்ததில் தலைவா படம் ரிலீஸாகாததால் விஷ்ணு மிகவும் கவலையுடன் இருந்தார். இதுப்பற்றி எங்களிடமும் சொல்லி வருத்தப்பட்டார். அதனால்தான் அவர் தற்கொலை செய்து‌ கொண்டார் என்றனர்.

துடியலூர் போலீசார் விஷ்ணுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தலைவா படத்துக்கான தற்கொலையா... அல்லது வேறு காரணத்துக்காக நடந்த தற்கொலையை தலைவாவுக்காக நடந்ததாகக் கூறி பரபரப்பு கிளப்புகிறார்களா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விஷ்ணுவின் நண்பர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுவின் குடும்பம் மிக ஏழ்மையானது. கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர் அவரது பெற்றோர்.

English summary
According to reports, a 20 year old youth committed suicide due to the cancel of Thalaivaa release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X