நீரா ராடியா டேப் மீதான நடவடிக்கை.. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள்... இந்த தொலைபேசி உரையாடல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசின் மூலை முடுக்கு தொடர்பான அத்தனை விஷயங்களையும் ஒரு தனிநபருடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இத்தனை ஆண்டுகளாகியும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசு கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications