For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங். ஆளும் மாநிலங்களில் சோனியா மருமகன் நில கொள்ளை கைவரிசை: யஷ்வந்த் சின்ஹா

By Mathi
Google Oneindia Tamil News

BJP demands SIT inquiry on Vadra's land scam
டெல்லி: காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் அனைத்திலுமே நில மோசடியில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா கைவரிசை காட்டியிருக்கிறார் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யஷ்வந்த் சின்ஹா, சோனியா மருமகன் வதேராவின் நில மோசடி தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும். ராபர்ட் வதேராவை பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது. அவர் ஹரியானாவில் மட்டும் நில மோசடியில் ஈடுபடவில்லை.

காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற அனைத்து மாநிலங்களிலுமே தமது கைவரிசையை காட்டியிருக்கிறார். இது பற்றி நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் ராபர்ட் வதேராவின் பெயரை உச்சரித்தாலே போதும்.. அனைத்து காங்கிரஸ் எம்.பிக்களும் எழுந்து நின்று கூச்சல் போட்டு குழப்பத்தை உருவாக்குகின்றனர். அவர் வங்கி விதிகள், வருமான வரித்துறை உள்ளிட்ட அனைத்தையுமே ஏமாற்றிக் கொண்டு வருவதால் உச்சநீதிமன்றத்தி கண்காணிப்பிலான சிறப்பு விசாரணை அவசியம் என்றார்.

English summary
Senior BJP leader Yashwant Sinha told, Indian govt has been continuously covering up Robert Vadra's scams. We Want SIT to inquiry into this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X