For Daily Alerts
Just In
காங். ஆளும் மாநிலங்களில் சோனியா மருமகன் நில கொள்ளை கைவரிசை: யஷ்வந்த் சின்ஹா
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யஷ்வந்த் சின்ஹா, சோனியா மருமகன் வதேராவின் நில மோசடி தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும். ராபர்ட் வதேராவை பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது. அவர் ஹரியானாவில் மட்டும் நில மோசடியில் ஈடுபடவில்லை.
காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற அனைத்து மாநிலங்களிலுமே தமது கைவரிசையை காட்டியிருக்கிறார். இது பற்றி நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் ராபர்ட் வதேராவின் பெயரை உச்சரித்தாலே போதும்.. அனைத்து காங்கிரஸ் எம்.பிக்களும் எழுந்து நின்று கூச்சல் போட்டு குழப்பத்தை உருவாக்குகின்றனர். அவர் வங்கி விதிகள், வருமான வரித்துறை உள்ளிட்ட அனைத்தையுமே ஏமாற்றிக் கொண்டு வருவதால் உச்சநீதிமன்றத்தி கண்காணிப்பிலான சிறப்பு விசாரணை அவசியம் என்றார்.
Comments
English summary
Senior BJP leader Yashwant Sinha told, Indian govt has been continuously covering up Robert Vadra's scams. We Want SIT to inquiry into this.
Story first published: Tuesday, August 13, 2013, 12:43 [IST]