For Daily Alerts
Just In
நீர்மூழ்கிக் கப்பல் விபத்து: பிரதமருடன் ஏ.கே. அந்தோணி ஆலோசனை- விசாரணைக்கு உத்தரவு
மும்பையில் ஐஎன்எஸ் சிந்து ரக்சக் நீர்மூழ்கிக் கப்பலில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்தக் கப்பலில் இருந்த 18 வீரர்கள் பலியாகிவிட்டனர். பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி விளக்கம் அளித்தார்.
பின்னர் மும்பை சென்ற அவர் சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டார். இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
சம்பவம் குறித்து விரைவில் அவர் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்ய உள்ளார்.
English summary
AK Antony briefs PM Manmohan Singh on INS Sindhurakshak fire and will go to Mumbau.