For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற இருவர் சுட்டுக் கொலை!

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குப்வாரா பகுதியில் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இருவர் இன்று காலை இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். ஆனால் எல்லைப் பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற இந்திய ராணுவத்தினர் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் தீவிரவாதிகள் 2 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றது முறியடிக்கப்பட்டுள்ளது.

English summary
Two militants have been killed as the army foiled an infiltration bid by militants along the Line of Control in Kupwara district of Jammu and Kashmir early on Wednesday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X