For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி கைது!: லஷ்கர் இ தொய்பாவின் வெடிகுண்டு நிபுணர்!!

By Shankar
Google Oneindia Tamil News

Abdul Karim Tunda
டெல்லி: இந்தியாவின் அதிகம் தேடப்படும் தீவிரவாதிகளில் ஒருவனான லஷ்கர் இ தொய்பாவின் அப்துல் கரீம் துண்டாவை டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். இவன் தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி ஆவான்.

லஷ்கர் இ தொய்பாவின் வெடிகுண்டு நிபுணர் இந்த துண்டா என்பது குறிப்பிடத்தக்கது.

26/11 தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் 15 இடம் இந்த துண்டாவுக்கு. பாகிஸ்தானில் பதுங்கியிருந்த இவனை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டிருந்தது.

டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்பட 40 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இவனுக்கு தொடர்பிருந்ததாக இந்தியா குற்றம்சாட்டியிருந்தது.

லஷ்கர் இ தொய்பாவுடன் மட்டுமல்ல, ஜெய்ஷ் இ மொகம்மத், மார்காஸ் அல் தாவா போன்ற தீவிரவாத இயக்கங்களுடனும் இவனுக்குத் தொடர்பிருந்தது.

இந்தியாவில் மேற்கு உத்திரபிரதேசத்தில் பிறந்த துண்டா, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயால் தீவிரவாதியாக மாற்றப்பட்டான். வெடிகுண்டு தயாரிப்பது, நவீன முறையிஸல் பல்வேறு நிலைகளுக்கும் அனுப்பி வைப்பதில் துண்டா நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோ - நேபாள எல்லையில் வைத்து இன்று காலை டெல்லி போலீஸார் துண்டாவைக் கைது செய்துள்ளனர்.

English summary
New Delhi: One of India's 20 most wanted terrorists Abdul Karim Tunda was arrested by the Special Cell of Delhi Police from the Indo-Nepal border last night and produced at a Delhi court this morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X