தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி கைது!: லஷ்கர் இ தொய்பாவின் வெடிகுண்டு நிபுணர்!!
லஷ்கர் இ தொய்பாவின் வெடிகுண்டு நிபுணர் இந்த துண்டா என்பது குறிப்பிடத்தக்கது.
26/11 தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் 15 இடம் இந்த துண்டாவுக்கு. பாகிஸ்தானில் பதுங்கியிருந்த இவனை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டிருந்தது.
டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்பட 40 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இவனுக்கு தொடர்பிருந்ததாக இந்தியா குற்றம்சாட்டியிருந்தது.
லஷ்கர் இ தொய்பாவுடன் மட்டுமல்ல, ஜெய்ஷ் இ மொகம்மத், மார்காஸ் அல் தாவா போன்ற தீவிரவாத இயக்கங்களுடனும் இவனுக்குத் தொடர்பிருந்தது.
இந்தியாவில் மேற்கு உத்திரபிரதேசத்தில் பிறந்த துண்டா, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயால் தீவிரவாதியாக மாற்றப்பட்டான். வெடிகுண்டு தயாரிப்பது, நவீன முறையிஸல் பல்வேறு நிலைகளுக்கும் அனுப்பி வைப்பதில் துண்டா நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோ - நேபாள எல்லையில் வைத்து இன்று காலை டெல்லி போலீஸார் துண்டாவைக் கைது செய்துள்ளனர்.