இளவரசன் தந்தைக்கு கொலை மிரட்டல்
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளவரசன் காதலித்து, கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர் கடந்த ஜூலை 4ம் தேதி தர்மபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார்.
இளவரசன் மரணம் குறித்து விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் இளங்கோவன் ரிட் மனு தாக்கல் செய்தார். விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில், கடந்த 7ம் தேதி இளங்கோவன் வீட்டிற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் இளங்கோவனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் கடந்த 7ம் தேதி இளங்கோவன் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளளார்.
அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேவைபப்பட்டால் இளங்கோவனுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து போலீஸார் முடிவு செய்யவுள்ளனராம்.