தலைவா விவகாரம்..ஜெயலலிதாவை ட்விட்டரில் கலாய்த்த உதயநிதி! கரம் கோர்த்த துரைதயாநிதி!
சென்னை: தலைவா திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ட்விட்டரில் மு.க .ஸ்டாலின் மகன் உதயநிதி கலாய்க்க, அவருடன் மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதியும் கரம் கோர்த்திருக்கிறார்.
தலைவா படம் ஆகஸ்ட் 9-ந் தேதி வெளியாக வேண்டியது. ஆனால் வெளியில் சொல்லிக் கொள்ளவே முடியாத 'உள்' காரணங்களால் முட்டுக்கட்டை நீடித்தது.
ஒருவழியாக நாளை தலைவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவுதான் உதயநிதி ஸ்டாலினும் துரைதயாநிதி அழகிரியும் ட்விட்டரில் கலாய்த்திருக்கிறார்கள்.
அம்மாவுக்கு நன்றி சொல்லலையே.. உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், இன்னும் அம்மாவுக்கு யாரும் நன்றி சொல்லலையே? மாணவர் புரட்சி படைக்கு என்ன தொடர்பு? என்று கேட்டிருக்கிறார்.
கரம் கோர்த்த மு.க. அழகிரி மகன்
இந்த ட்விட்டருக்கு பதில் கொடுத்திருப்பவர் மு.க. அழகிரி மகன் துரைதயாநிதி அழகிரி.
தலைவா பற்றி அழகிரி மகன் சொன்னது என்ன?
தலைவா படம் செவ்வாய்க்கிழமை வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. திரை அரங்கங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதே இதே நடவடிக்கையை அரசு ஏன் முன்னரே எடுக்கவில்லை? அப்படி முன்னரே எடுத்திருந்தால் படம் பிரச்சனையின்றி ரிலீஸாகி இருக்குமே? நான் நினைக்கிறேன் இது சரியான கேள்வி என்று! மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.