For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமான பயண முறைகேட்டில் சிக்கிய 9 மத்திய அமைச்சர்கள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: விமானத்தில் பயணம் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட சலுகைகளை தவறாகப் பயன்படுத்தியதாக 9 மத்திய அமைச்சர்கள் மீது புகார் எழுந்துள்ளது.

இந்தியாவிலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் செல்வதற்கு எம்.பி.க்களுக்கு இந்திய அரசால் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளை எம்.பி.க்கள் தவறாக பயன்படுத்தியாகதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விமானத்தில் பயணம் செய்த எம்.பி.க்கள் பலர் சாதாரண கட்டணங்களில் பயணித்துவிட்டு, சொகுசு கட்டணத்தில் பயணம் செய்ததாக கணக்கு காட்டியிருக்கின்றனர். மேலும், தாங்கள் செல்வதுபோன்று கணக்கு காண்பித்துவிட்டு, மற்ற நபர்களை விமானங்களில் பயணிக்க வைத்ததும் தற்போது அம்பலமாகியிருக்கிறது.

சுமார் 9 எம்.பி.க்கள் தற்போது இந்த குற்றச்சாட்டியுள்ள சிக்கியுள்ளார்கள் என்றும், மேலும் இன்னும் பல எம்.பி.க்களின் இதேபோன்ற குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது.

இந்த குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரிக்கும் எனவும், சி.பி.சி. விசாரணையில் இன்னும் பல்வேறு எம்.பி.க்களும், பல்வேறு விதமான முறைகேடுகளும் அம்பலமாகலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

English summary
9 union ministers are accused of fraud in air travel. CBI has been asked to probe into this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X