பெண்களே வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.. ஹேமமாலினி எச்சரிக்கை
புனே: பெண்கள் வீட்டை விட்டு வெளியே போனாலே கற்பழிக்கப்படும் அபாயகரமான சூழ்நிலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிலவுகிறது என்று கூறியுள்ளார் நடிகையும், பாஜக எம்.பியுமான ஹேமமாலினி.
நாட்டு நிலைமை சரியில்லை என்பதால் பெண்கள் நிலை மோசமாக இருப்பதாகவும், பெண்கள் யாரும் வீட்டை விட்டுப் போக வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளியே போவதாக இருந்தால் தனியாக போக வேண்டாம், உற்ற துணையுடன் போகுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியதாவது...
வெளியே போகாதீர்கள்
பெண்களுக்கு நான் தரும் அட்வைஸ் யாரும் வெளியே போக வேண்டாம். அப்படியே போவதாக இருந்தாலும் தனியே போகாதீர்கள்.
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நீங்கள் சிக்கிக் கொள்ள நேரிடும். எனவே தனியாக போவதைத் தவிருங்கள்.
திரவுபதிக்கு கிருஷ்ணர் வந்தார்
திரவுபதியின் மானம் காக்க அன்று கிருஷ்ணர் வந்து கரம் கொடுத்தார். துணி கொடுத்தார்.
ஆனால் இன்று அப்படி நடக்குமா...
ஆனால் இன்று அப்படி நடக்க முடியுமா.. கடவுள் வந்து நம்மைக் காப்பாற்றுவார் என்று எந்தப் பெண்ணாலுமே நினைக்க முடியாத நிலைதான் உள்ளது என்றார் ஹேமமாலினி.
ஹேமமாலியின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.