For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறையில் 5 நாட்களாக ஜெகன் உண்ணாவிரதம்! உஸ்மானியா மருத்துவமனைக்கு மாற்றம்!

By Mathi
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திர மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 25-ந் தேதி அன்று சிறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் அவர். தொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இதைத் தொடர்ந்து ஜெகன்மோகனை மருத்துவர்கள் குழு பரிசோதித்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் ஜெகன் போராட்டத்தைக் கைவிட மறுக்கவே அவர் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Jaganmohan reddy

ஜெகன் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிந்திருப்பதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

English summary
YS Jagan Shifted to Osmania hospital after 5 days of indefinite hunger strike. Jagan has been fasting to demand that the Centre serve equal justice to all regions or maintain status quo in Andhra Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X