For Daily Alerts
Just In
ஊழல் ஆவணங்களை மக்கள் கோர தலைமை நீதிபதி காரணம்.. சாடுகிறது பிரதமர் அலுவலகம்!
டெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊழல் தொடர்பான ஆவணக்களை பொதுமக்கள் கோருவதற்கு தலைமை நீதிபதி சதாசிவம் உள்ளிட்டோர் எடுக்கும் முடிவுகளே காரணம் என்று பிரதமர் அலுவலகம் புகார் தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகம் அளித்துள்ள புகாரில், மிகவும் முக்கியமானதும், ரகசியமாக வைக்கப்பட வேண்டிய விவரங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் பெற்று விடுகின்றனர். இதற்கு காரணம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், முன்னாள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மற்றும் அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி ஆகியோர்தான்.
இவர்கள் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகள், பல்வேறு ஊழல் தொடர்பான ஆவணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்கள் கோருவதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
Comments
English summary
In a remarkable instance of transparency, the Prime Minister's Office made public under RTI a complaint which had been given to it leveling allegations of corruption against, among others, chief justice of India P Sathasivam, his predecessor Altamas Kabir and attorney general G E Vahanvati.
Story first published: Friday, August 30, 2013, 12:01 [IST]