அவதூறு வழக்கு: நாகர்கோவில் கோர்ட்டில் நவம்பர் 5ல் விஜயகாந்த் ஆஜராக உத்தரவு
இதன் மீதான விசாரணைக்கு விஜயகாந்த் ஆஜர் ஆகாததால் கடந்த ஜூலை 1ல் விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நாகர்கோவில் நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜரானார்.
அப்போது வக்கீல்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அமளி நிலவியதால் நீதிபதி அந்த வழக்கை ஆகஸ்டு 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி இந்த வழக்கு நாகர்கோவில் அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தே.மு.தி.க. சார்பில் ஆஜரான வக்கீல் பொன்.செல்வராஜன் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் தே.மு.தி.க. மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் வருகிற 1-ந்தேதி நடைபெற இருப்பதால் விஜயகாந்த் இன்று நடக்கும் விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என கூறி இருந்தார்.
இதற்கு அரசு வக்கீல் ஞானசேகர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இருதரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிபதி வழக்கை நவம்பர் 5-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.