கோவையில் மான் வேட்டையாடிய 7 பேர் கைது
கோவை, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், காட்டுயானை, மான், காட்டெருமை உள்ளிட்ட, வனவிலங்குகள், அதிகமாக உள்ளன. நேற்று முன்தினம், போளுவாம்பட்டி வனச்சரக பகுதிகளில் ஊடுருவிய கும்பல், மான் வேட்டையாடுவதாக, வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வனத் துறையினர், சிறுவாணி மெயின் ரோடு - இருட்டுபள்ளம் பஸ் ஸ்டாப் அருகே, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். வேகமாகச் சென்ற ஜீப், இரு கார்களை நிறுத்தி சோதனையிட்ட போது, இரு புள்ளிமான்களை வேட்டையாடி, கார் "டிக்கி'யில் கடத்தியது தெரிய வந்தது. வாகனங்களில் வந்த ஏழு பேரையும், வனத் துறையினர் கைது செய்தனர். மான் வேட்டைக்கு பயன்படுத்திய, 0.22 ரக துப்பாக்கி, வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டன.
7 பேர் மீதும் தமிழ்நாடு வனத்துறை பாதுகாப்பு சட்டம் மற்றும் வனவிலங்கு உயிரின பாதுகாப்புச் சட்டம் ஆகியப் பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.