செவ்வாய் கிரகத்தில் முதன்முறையாக சோலோவாக பயணித்த கியூரியாசிட்டி
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் முதல்முறையாக சோலோவாக பயணம் செய்துள்ளது.
நாஸா செவ்வாய் கிரகத்திற்கு கியூரியாசிட்டி விண்கலத்தை அனுப்பியது. இந்நிலையில் அந்த விண்கலம் கடந்த 27ம் தேதி அடானமஸ் நாவிகேஷன் அல்லது ஆட்டோ நேவ்வை பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தில் சோலோவாக பத்திரமாக பயணம் செய்துள்ளது. இந்த ஆட்டோ நேவ் மூலம் அது எடுக்கும் படங்களை வைத்து எது பாதுகாப்பான பாதை என்பதை அறிந்து கொள்ளும். இதனால் அந்த விண்கலத்தால் பாதுகாப்பாக பயணிக்க முடியும்.
செவ்வாய் கிரகத்தில் ஏற்கனவே நாஸாவால் அனுப்பப்பட்ட ஆப்பர்சுனிட்டி விண்கலமும் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கியூரியாசிட்டி பயணம் செய்த இடம் முதலில் பாதுகாப்பானது இல்லை என்று கருதப்பட்டது.
முதலில் பூமியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் எந்த பகுதி பாதுகாப்பானது என்பதை அறிந்து அதை கியூரியாசிட்டிக்கு தெரிவிப்பார்கள். ஆராய்ச்சியாளர்களால் பாதுகாப்பானது என்று கூறப்பட்ட இடத்திற்கு மட்டுமே விண்கலம் பயணப்பட்டது. ஆனால் ஆட்டோ நேவ் மூலம் கியூரியாசிட்டியால் பூமியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களால் பார்க்க முடியாத இடத்தை பார்த்து அது பாதுகாப்பானதா என்று அறிய முடியும்.