வோடபோன் நிறுவனத்தின் பங்குகளை ரூ. 6.8 லட்சம் கோடிக்கு வாங்கும் வெரிசோன்!
இந்த இரு நிறுவனங்களும் இணைந்து வெரிசோன் வயர்லெஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றன. இப்போது இந்த நிறுவனத்தில் வோடபோனுக்கு சொந்தமான 45 சதவீத பங்குகளை வெரிசோன் வாங்கவுள்ளது. இதற்காக வோடபோனுக்கு வெரிசோன் 130 பில்லியன் டாலர்களை வழங்கவுள்ளது.
இதில் 70 பில்லியன் டாலர்களை பணமாகவும், 60 பில்லியன் டாலருக்கு இணையான பங்குகளையும் வோடபோனுக்கு வெரிசோன் வழங்கவுள்ளது.
இதற்காகத் தேவைப்படும் நிதியை வெரிசோன் நிறுவனத்துக்கு ஜே.பி. மோர்கன் சேஸ், மோர்கன் ஸ்டான்லி, பார்க்லேஸ் வங்கி, அமெரிக்கா மெரில் லின்ஜ் ஆகிய வங்கிகள் தரவுள்ளன.
20 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட வோடபோன் இப்போது இந்தியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்பட 30 நாடுகளில் செல்போன் சேவையை நடத்தி வருகிறது.
வெரிசோன், வோடபோன் ஆகிய இரு நிறுவனங்களுமே நீண்ட காலமாகவே மோதலில் இருந்து வந்தன. ஒரு நிறுவனத்தை இன்னொன்று வாங்க முயன்று வந்தன. இப்போது இதில் வெரிசோன் வெற்றி பெற்றுள்ளது.