ஹைதராபாத் பப்பில் மப்பில் ஆபாச நடனம்: 60 பேர் சிக்கினர், 3 ஊழியர்கள் கைது
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள பப் ஒன்றில் குடித்துவிட்டு ஆபாச நடனமாடிய 60 பேர் மற்றும் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹைதராபாத்தில் உள்ளது பல்ஸ் லவுஞ்ச். அந்த பப்பில் பலர் ஆபாசமாக நடனம் ஆடுவதாகவும், ஆபாசமான செய்கைகள் காட்டுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று இரவு 1 மணிக்கு அந்த பப்பிற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஆபாச நடனமாடிய 60 பேர் மற்றும் பப் ஊழியர்கள் 3 பேரை பஞ்சகுட்டா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்த 60 பேரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் பப் மேனேஜர் அகுலா ஆனந்த், பார் பொறுப்பாளர் எஸ். விக்ரமன் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அஜய் ஆகியோர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.
இரவு 11 மணிக்கு மேல் மதுபானங்களை வழங்கியது, ஆபாச செயல்கள் உள்ளிட்ட குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.