ஆசாராம் பாபுவுக்கு சிறுமிகள், பெண்களை சப்ளை செய்த ம.பி. ஹாஸ்டல் வார்டன்
ஜோத்பூர்: மதகுருவான ஆசாராம் பாபு மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா குருகுல் விடுதியின் வார்டனுடன் உறவு கொண்டதாக அவரது உதவியாளர் சிவா தெரிவித்துள்ளார்.
மதகுருவான ஆசாராம் பாபு பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் இந்நிலையில் அவரது உதவியாளர் சிவா பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
போலீசார் சிவாவை கைது செய்து விசாரித்தபோது தான் இந்த தகவல்கள் கிடைத்துள்ளது.
வார்டனுடன் உறவு
ஆசாராம் பாபு மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா குருகுல் விடுதியின் வார்டன் சில்பியுடன் உடல் உறவு கொண்டதாக சிவா தெரிவித்துள்ளார். இந்த குருகுல் விடுதி ஆசாராம் பாபுவுக்கு சொந்தமானது.
2 வீடுகள்
ஆசாராம் ஷில்பிக்கு டெல்லி மற்றும் அகமதாபாத்தில் 2 பிளாட்டுகள் வாங்கிக் கொடுத்துள்ளாராம். ஷில்பி ஆசாராமுக்காக பல சிறுமகள் மற்றும் பெண்களை ஆசிரமத்திற்கு அனுப்பி வைப்பாராம்.
ஆவி பிடித்திருக்கு
பாலியல் புகார் கொடுத்த 16 வயது சிறுமிக்கு ஆவி பிடித்திருக்கிறது என்றும், அவரை குணப்படுத்த ஆசாராம் பாபுவிடம் அழைத்துச் சென்று சில பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் ஷில்பியும் மற்றொரு விடுதியின் ஊழியர் கேசவும் அப்பெண்ணின் பெற்றோரை பயமுறுத்தி உள்ளனர்.
பாதுகாப்பு
ஆவியை விரட்டுகிறேன் என்ற பெயரில் ஆசாராம் பாபு அந்த சிறுமியை தனி அறைக்குள் அழைத்துச் செல்ல வெளியே காவலுக்கு நின்றவர் சிவா. அறைக்குள் நுழைந்ததும் ஆசாராம் விளக்கை அணைத்துவிட்டு சிறுமியை கண்ட இடத்தில் தொட்டுள்ளார். முத்தம் கொடுத்துள்ளார். இந்த தகவலை அந்த சிறுமி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.