எய்ட்ஸ் பரப்பியதாக சந்தேகம்… ரஷ்ய மாடல் அழகியை எரித்துக் கொன்ற கணவன்
ரஷ்யாவில் பிரபல மாடல் அழகி யூலியா லோஷாகினா (28). இவரது கணவர் திமித்ரி லோஷாகினா (37) இவர் பிரபல போட்டோ கிராபர். யூலியாவை பல்வேறு கோணங்களில் போட்டோ எடுத்த திமித்ரி, அவரது அழகில் மயங்கி காதலிக்க தொடங்கினார்.
ஒரு முறை இந்தியாவில் மணமகள் அணியும் உடைகளை படம் பிடிக்க திமித்ரி சென்றார். அவருடன் யூலியாவும் சென்றிருந்தார். அப்போது விதவிதமான மணமகள் உடையில் யூலியாவை படம் பிடித்தார் திமித்ரி. அப்போது அவரது அழகில் மயங்கி இந்தியாவிலேயே தனது காதலை சொன்னார். அதை யூலியாவும் ஏற்று கொண்டதால் இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி யூலியா திடீரென காணாமல் போனார். பிரபலமான மாடல் அழகி மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவரது உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.
அவரது தம்பி மைக்கேல், யூலியாவை தீவிரமாக தேடி வந்தார். இதை தொடர்ந்து அடர்ந்த காடுகள் நிறைந்த யூரல் மலை பகுதியில் யூலியாவின் சடலம் நிர்வாண நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் யூலியாவின் கழுத்து திருகப்பட்டு, உடல் எரிக்கப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், யூலியா எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து கணவர் திமித்ரியை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், யூலியா மூலம் திமித்ரிக்கு எய்ட்ஸ் தொற்றி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த திமித்ரி, யூலியாவை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மாடல் அழகி யூலியாவை மர்ம நபர்கள் யாராவது கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
ஆனால், அடிப்படை காரணம் இல்லாமல் என் மீது குற்றம் சுமத்துகின்றனர். நான் மனைவியை மிகவும் நேசிக்கிறேன். இந்த கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திமித்ரி தெரிவித்துள்ளார். மாடல் அழகி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.