உயிருக்கு போராடும் கடலூர் சிறுவன் ஹரீஷ்.. நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்
கடலூரை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி தேவைப்படுகிறது. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்களேன் ப்ளீஸ்!
கடலூரை சேர்ந்த கவுரி மற்றும் ஆறுமுகம் தம்பதியின் மகன் ஹரீஷ். இவர்களைப் பார்க்கும் அனைவருக்கும் நொடிப்பொழுதில் இந்தக் குடும்பத்தினரின் வலியும் ஏழ்மையும் புரிந்துவிடும். மற்ற குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியாக ஓடி விளையாடி கொண்டிக்கும் நேரத்தில் எட்டு வயதாகும் ஹரீஷ் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
ஹரீஷுக்கு மூன்று வயதில் மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட தொடங்கியது. தங்கள் மகனின் பிச்னையை சரி செய்ய ஆறுமுகம் - கவுரி செல்லாத மருத்துவமனைகள் இல்லை. கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை வரை அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்றுள்ளனர்.
அப்போது தான் ஹரீசுக்கு தீவிர இதய நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், எந்த மருத்துவமனையும் அவருக்கு தேவையான அறுவை சிகிச்சை செய்ய முன்வரவில்லை.
சமீபத்தில்தான், தெரிந்தவர் ஒருவர் ஹரீஷை மியாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுபடி அறிவுரை அளித்துள்ளார். உடனடியாக ஆறுமுகம்-கவுரி தம்பதி தங்கள் எட்டு வயதுக் குழந்தை ஹரீஷை மியாட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
CCTGA/Severe form of Ebstein's Malformation of left AV Valve, Severe AV Valve regurgitation என மிகக் கொடிய இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள ஹரீஷுக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என மியாட் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அறுவை சிகிச்சை மூலம் Ebsteinoid Left AV Valve, Repair of Mitral Valve ஆகியவற்றை ஹரீஷுக்கு மேற்கொள்ள வேண்டும். ஹூரீஷின் பாதிப்பு மிகவும் தீவிரமாக உள்ளதால் அவருக்கு உடனடியாக இந்த ஆப்ரேசனை மேற்கொள்ள வேண்டும். இதற்கு சுமார் ரூபாய் 4,60,000 அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
கடலூரில் சாதாரண வேன் டிரைவராக உள்ள ஆறுமுகத்திடம் இவ்வளவு பெரிய தொகை இல்லை. தற்போது மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹரீஷை நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம். எட்டு வயதுக் குழந்தை ஹரீஷை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்களேன் ப்ளீஸ்!
RECOMMENDED STORIES