குஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து!
அபுதாபி: மும்பைக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே அபுதாபியில் இன்று முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இன்று முதல் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதியது.
மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றி பெற்றது. 19.2 ஓவரில் சிஎஸ்கே 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை 162 ரன்கள் எடுத்த நிலையில் சிஎஸ்கே 166 ரன்கள் எடுத்து வென்றது.
ஆரம்பமே சரவெடி.. பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் பதுங்கி பாய்ந்த சிஎஸ்கே.. மும்பையை வீழ்த்திய தோனி படை
மாஸ்டர் லோகேஷ்
பல பிரபலங்களும் சென்னை அணியின் வெற்றிக்கு ஆதரவாக டிவிட் செய்துளளனர். மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்று டிவிட் செய்துள்ளார்.
நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு செய்துள்ள டிவிட்டில், நல்ல தொடக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ். ராயுடு, டு பிளசிஸ் நன்றாக விளையாடினார்கள். தோனிக்கு பெரிய விசில் போடுங்க என்று குஷ்பு கூறியுள்ளார்.
என்ன தைரியம்
டீ காக், திவாரி, குருணால் மாதிரி 3 பேர் left handers இருக்குற டீம ஒரு off spinner கூட இல்லாம வச்சி சோலிய முடிக்கிறதுகெல்லாம் குருட்டு தைரியம் வேணும்ல.
மைதானம்
கொரோனா காரணமாக மக்கள் கூட்டம் இன்றி ஐபிஎல் போட்டி நடந்த நிலையில் மைதானத்தில் பொய்யான சத்தம் வருவது வகையில் செய்யப்பட்டு இருந்தது. இதை இவர் கிண்டல் செய்துள்ளார்.
மொத்த ஸ்டேடியமும் அனாதைய கிடக்கு சத்தம் மட்டும் எங்கிருந்து டா வருது, என்னகட பித்தலாட்டம் இது???
அம்பானி பாய்
இந்த போட்டியில் மும்பை அணியின் ஓனராக அம்பானி இருப்பதால், பலரும் அதை கலாய்த்து உள்ளனர்.
அம்பானி to ரோஹித் : 2வது over முடிஞ்ச அப்புறம் umpire கிட்ட போயிட்டு சனிக்கிழமை மழ வரும்னு சொல்லு
பெங்களூர்
ஆனால் இந்த ரணகளத்திலும் சென்னை அணியை ஈ சாலா கப் நம்தே பாய்ஸ் கலாய்த்து உள்ளனர்.