ரபியுல் அவ்வல் வசந்தம் நூல்.. துபாயில் பிரம்மாண்டமாக நடந்த வெளியீட்டு விழா!
துபாயில் கவிஞர் அபுஹாஷிமா எழுதிய ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
அபுதாபி: துபாயில் கவிஞர் அபுஹாஷிமா எழுதிய ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
துபாயில் கவிஞர் அபுஹாஷிமா எழுதிய ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெளியீட்டு மற்றும் மற்றும் இலக்கிய பேரொளி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தோஷிபா எலிவேட்டர்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஜே. முஹம்மது இக்பால், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
விழாவில் காயல்பட்டிணம் என்ஜீனியர் வாவு அபுபக்கர், நூல் ஆய்வுரையில் கவிஞர் நபி மீது கொண்டுள்ள நேசத்தினை , மற்றும் அவர்களின் மனித நேயகருத்துகளையும் எடுத்துரைத்தார் .
காரைக்கால் இறை மலர் கவிஞர் என். நூர் பாத்திமா வாழ்த்துரை வழங்கினார். ரபியுல் அவ்வல் வசந்தம் நூலை கவிஞர் சீர்காழி தாஜ் அண்ணன் நிணைவரங்கில் நூலை அறிமுகம் செய்து இந்த நூலில் உள்ள பல்வேறு அம்சங்கள் சிறப்பு பற்றி திருகுர்ஆன் ஆய்வாளர் மேலப்பாளையம் ரஹ்மத் ராஜ்குமாரன் , குறிப்பாக எழுத்தாளர்கள் பற்றி குர்ஆன் ௯றுவதை எடுத்து சொன்னார்..
கல்லிடைக்குறிச்சி தொழில்அதிபர் முஹையதீன் அவர்கள் கவிஞர் எல்லா தீவிரவாதங்களுக்கும் எதிரானவர், நபிகளார் போதித்ததே சமநிலையும்,., நல்லிணக்கமே என்றார் . பேராசியர் மன்சூர், இன்றைய கால கட்டத்தில் நல்ல இஸ்லாமிய சமுக விஞ்ஞானிகள் தேவை அப்படிபட்டவர்களாலேயே சிறந்தத்தொரு சமுதாயம் அமைக்க முடியும் என பேசினார்.
கவிஞர்அபுஹாஷிமாவுக்கு துபாய் அமீரகம் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் இலக்கிய சேவையை பாராட்டும் வகையில் இலக்கிய பேரொளி விருது வழங்கப்பட்டது .
விழாவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் முனைவர் பி.எம். மன்சூர்,
ரஹ்மத் ராஜகுமாரன், கல்லிடைகுறிச்சி முஹம்மது மைதீன், காயல்பட்டினம் வி.எஸ்.எம். அபூபக்கர், ராசல்கைமா தமிழ் சங்க தலைவர் ஜாஹிர் ஹீசைன், USA தமிழ் சங்க தலைவர் சுபா சீனிவாசன் பலர் கலந்து கொண்டனர்