என்ன அழகு.. எத்தனை அழகு.. டோனியின் எறா மீசையை ரசித்து சாக்ஷி கொடுத்த ரியாக்ஷன்
அபுதாபி: எவ்வளவு அழகானவர் என தனது கணவரை ஒரு கிரிக்கெட் ரசிகையான சாக்ஷி சிங் வர்ணித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளது வைரலாகி வருகிறது.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதங்களில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனாவால் ஒரு ஆண்டை காட்டிலும் ஐபிஎல் போட்டிகள் 438 நாட்களுக்கு பிறகு நேற்று தொடங்கியது.
இந்த முதல் நாள் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் டோனியின் மீசையும் பிரெஞ்ச் தாடியும் ரசிகர்களை கவர்ந்தது.
பந்தே படலையே.. துல்லியமாக கணித்த கில்லி டோனி.. டிஆர்எஸ்ஸை கரெக்ட்டாக பயன்படுத்தி அசத்திய தல!
டோனியின் புதிய லுக்
அவர் சிங்கம் சூர்யா போல் மிடுக்கான மீசையை வைத்திருந்தார். அத்துடன் சிறிய பிரெஞ்ச் தாடியையும் வைத்திருந்தார். டோனியின் புதிய லுக்கை ரசிகர்கள் மட்டுமல்லாமல் டோனியின் மனைவி சாக்ஷியும் ரசித்தார். டோனியின் மிகப் பெரிய ரசிகையான சாக்ஷி, தனது தல டோனி 438 நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் விளையாடியதை ஆரவாரத்துடன் ரசித்தார்.
சிஎஸ்கே பக்கம்
பின்னர் சாக்ஷி தனது இன்ஸ்டா பக்கத்தில் சிஎஸ்கே பக்கத்தையும் டேக் செய்திருந்தார். அந்த போஸ்ட்டில் என்னா அழகு டோனி என ஆச்சரியத்துடன் கேட்டிருந்தார். சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து ஐபிஎல்லில் அனைவரின் கண்ணும் டோனி மீதே இருந்தது.
விளையாடாமல் இருந்த டோனி
கடந்த ஜூலை மாதம் முதல் விளையாடாமல் இருந்த டோனி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐபிஎல் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதை உறுதி செய்யும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியில் அவர் பங்கேற்றார். இந்த நிலையில் கொரோனாவால் ஐபிஎஸ் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ரசிகர்கள்
தற்போதைய சூழலில் மீண்டும் இந்த போட்டிகள் தொடங்கியிருப்பதால் டோனியை ரசிகர்களோடு ரசிகையாக சாக்ஷியும் ரசித்தார் என்பது அவரது இன்ஸ்டா பக்கத்தின் மூலம் தெரிகிறது. அதிலும் முதல் போட்டியிலேயே டோனியின் சிஎஸ்கே வெற்றி பெற்றது டோனி மீதான ரசிகர்களின் நம்பிக்கையை நிரூபித்தது.