திமுக மாநிலங்களவை முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்
அரியலூர்: திமுக மாநிலங்களவை முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவரது மரணம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் சிவசுப்பிரமணியம். இவர் 1998 2004 வரை திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் 1989ம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து இருந்தார்.
தற்போது திமுகவில் சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார். இவரது மகன் எஸ்.எஸ்.சிவசங்கர் அரியலூர் மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நீண்ட நாள்களாக பாதிக்கப்பட்டு இருந்தார். இன்று அவர் இயற்கை எய்தினார். இவரது மறைவு திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவரது உடல் அஞ்சலிக்காக அவரது அரியலூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சிவசுப்பிரமணியம் மறைவுக்கு திமுக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்