அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேத்தி கண் முன்பாக லாரியில் அடிபட்ட தாத்தா.. வைரலாகும் சோக வீடியோ

பேத்தி கண்முன்னே லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டு முதியவர் படுகாயம் அடைந்தார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பேத்தி கண் முன்பாக லாரியில் அடிபட்ட தாத்தா.. சோக வீடியோ

    அரியலூர்: பேத்தி கண்முன்னேயே தாத்தா மீது லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளான வீடியோ பதிவு ஒன்று வைரலாகி அனைவரையும் கலங்க செய்து வருகிறது.

    அரியலூர் மாவட்டம் பெரியார் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவர் நேத்து ராத்திரி பேத்தியை பைக்கில் ஏற்றிக் கொண்டு மருந்து வாங்க மெடிக்கல் ஷாப் வந்தார்.

    freak incident makes all sad a viral video

    மருந்து வாங்கி முடித்துவிட்டு, பைக்கை எடுக்கும்வரை அந்த குழந்தை இங்குமங்கும் ஓடியாடி விளையாடி கொண்டிருந்தது.

    பைக்கை ஸ்டார்ட் செய்துவிடவும், வண்டியில் ஏற குழந்தை தாத்தாவிடம் ஓடிவந்து, அவரது காலை இறுக்கமாக பிடித்து கொண்டது. அப்போது பயங்கர சத்தத்துடன் அந்த ரோட்டில் மினி லாரி வந்தது. பைக்கை நோக்கிதான் அந்த லாரி வருகிறது என்பதை புரிந்து கொண்ட அந்த குழந்தை, டக்கென மருந்துக்கடை பக்கம் திரும்பி ஓடுகிறது.

    ஆனால் அதற்குள் அந்த லாரி பைக்கில் உட்கார்ந்திருந்த தாத்தாவையும் சேர்த்து அடித்து இழுத்துக் கொண்டு போனது. இதை பார்த்து பதறி கதறி துடித்து அழுகிறாள் பேத்தி. அங்கிருந்தவர்கள் எல்லாம் சத்தம் கேட்டு ஓடிபோய் பார்க்கிறார்கள். என்ன செய்வதென்றே தெரியாமல், பயந்து போய் அழுதுகொண்டே நிற்கிறாள்.

    இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. நூலிழையில் குழந்தை உயிர் தப்பினாள். முருகேசன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியதால், திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    Arialyur Police has released CCTV Footage, An old man hit by Lorry and get severe injured
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X