கல்யாணமாகி 10 ஆண்டுகள்.. 2 குழந்தைகள்.. துரத்திய சந்தேகம்.. மனைவியை வெட்டி வீழ்த்திய கணவர்
அரியலூர் அருகே மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்
Recommended Video
அரியலூர்: கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகியும் அம்பிகா மேல் பாக்யராஜ்-க்கு சந்தேகம் குறையவில்லை. அதனால் அரிவாளை எடுத்து வெட்டிவிட்டார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ். 30 வயசாகிறது. இவரது மனைவி அம்பிகாவுக்கு 28 வயசாகிறது.
இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கல்யாணம் ஆனது முதலே தம்பதிக்குள் தகராறு அடிக்கடி ஏற்பட்டு வந்திருக்கிறது. 10 வருஷமாகவே அடிக்கடி சண்டை வந்து போவது இயல்பாக இருந்திருக்கிறது.
இதில் பாக்யராஜ், கடந்த 3 வருஷங்களாகவே துபாயில் வேலை பார்த்து வந்தார். ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் ஊருக்கு வந்தார். வந்த நாள் முதலே சண்டை.. அதிலும் சந்தேக சண்டை. நடத்தையில் சந்தேகப்பட்டு பிரச்சனை செய்வதால், அம்பிகா மிகவும் நொந்து போய் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த இந்த நிலையில் இன்றும் ரெண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது பாக்யராஜ் அம்பிகாவை அரிவாளை எடுத்து வந்து சரமாரியாக வெட்டி விட்டார். இதில் அலறி ரத்த வெள்ளத்தில் விழுந்த அம்பிகாவை உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனாலும் அங்கு சிகிச்சை பலனின்றி அம்பிகா உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் பாக்யராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.