கர்நாடகாவில் 10 மாத கைக் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் 10 மாத கைக்குழந்தைக்கும் கொரோனா பாதித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
இந்தியாவில் வேகமெடுக்கும் க்ளஸ்டர் பரவல்... முழு தகவல்
நாடு முழுவதும் இன்று கொரோனாவுக்கு 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவிலும் கர்நாடகாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருகிறது.
தமிழகத்திலும் இன்று கொரோனாவால் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 750க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகாவின் பந்த்வால் தாலுகாவில் 10 மாத கைக்குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த குழந்தையின் உறவினர்கள் அனைவரும் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
10 மாத குழந்தைக்கு யாரிடம் இருந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதை கண்டறியும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.
Comments
English summary
A 10 month old Child in Karnataka has been tested positive for Coronavirus.
Story first published: Friday, March 27, 2020, 16:35 [IST]