கோலார் அருகே ஆட்டோ- பேருந்து பயங்கர மோதல்.. 12 பேர் உடல் சிதறி சாவு
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சிந்தாமணி நகரில் இன்று காலை பேருந்தும், ஆட்டோவும் பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி நகரில் இன்று மதியம் ஆட்டோ ரிக்ஸாவில் ஏராளமான பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பேருந்து திடீரென ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் ஆட்டோவில் சென்றவர்களில் 12 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து நடந்த உடன் ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த கோர விபத்து காரணமாக சிந்தாமணி நகரில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
Karnataka: 12 people have died in a collision between an auto rickshaw and a bus in Chintamani. More than 20 injured in the incident. pic.twitter.com/xiCGcYCGPn
— ANI (@ANI) July 3, 2019
இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். விபத்து சாலை விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.