பிஞ்சிலே பழுத்த.. 19 வயது பெண்ணை மணம் முடித்த 16 வயது சிறுவன்.. கியாஸ் கனெக்ஷன் தந்தபோது வந்த லவ்!
19 வயது பெண் 16 வயது சிறுவனை மணந்துள்ளார்
பெங்களூர்: சிலிண்டர் போட வந்தபோதுதான் இருவருக்கும் லவ் ஸ்டார்ட் ஆகிஉள்ளது.. வெறும் 16 வயசுதான்.. இந்த வயசு தெரிந்தும் ஒரு ஜோடிக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர்!
Recommended Video
பெங்களூரை சேர்ந்த 16 வயது சிறுவன், அப்பகுதியில் சிலிண்டர் வெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் ஒரு இளம் பெண் வீட்டு வேலை செய்து வருகிறார். அந்த பெண்ணுக்கு வயது 19 ஆகிறது!
சிலிண்டர் கேஸ் டெலிவரி செய்யும்போது அந்த பெண்ணுக்கும், சிறுவனுக்கும் பற்றிக் கொண்டுவிட்டது.. இருவரும் ஒரே ஊர் என்பதால் நெருங்கி பழக ஆரம்பித்தனர்.. காதல் முற்றிகொண்டு வந்தது.. ஒரு கட்டத்தில் அந்த பெண், சிறுவனை நம்பி தன் வீட்டை விட்டே வெளியே வந்துவிட்டார்.. நேராக சிறுவன் வீட்டுக்கும் போய்விட்டார்.
வீட்டை விட்டு ஒரு இளம்பெண் தனியாக வந்ததையோ, அதுவும் 16 வயசு பையனை நம்பி வந்ததை நினைத்தோ, அந்த வீட்டில் யாருமே கவலைப்படவில்லை.. மாறாக, இரு வீட்டாரும் பேசி முடிவெடுத்து இவர்களுக்கு கல்யாணத்தை செய்து வைத்திருக்கிறார்கள். இருவரும் கணவன் மனைவியாக வாழ்க்கையை தொடங்கினார்கள்.
இதனிடையே தங்கள் மகள் ஓடிவிட்டதால், அவமானம் தாங்கா முடியாமல் அவரது பெற்றோர் நேபாளத்துக்கு சென்றுவிட்டனர். மேலும் சிறுவனின் வயது குறித்து அருகில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் எழுந்தது.. அதனால் கல்யாணம் ஆகி ஒரு வாரம் கழித்து, சிறுவனுக்கு வயசு 16 என்று போலீசுக்கு தகவல் போனது.
விரைந்து வந்த போலீசார், சிறுவனின் பிறப்பு சான்றிதழை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.. வயசு 16தான் என்று உறுதியானது.. இதையடுத்து குழந்தை திருமணம் என முடிவு செய்த போலீசார் அந்த இளம் பெண் மற்றும் சிறுவனின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.