பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த மாமா ரூமுக்குள் அம்மாவை கூட்டிட்டு போனார்.. கழுத்தை நெரித்தார்.. சிறுவனின் பரபரப்பு வாக்குமூலம்

Google Oneindia Tamil News

பெங்களூரு: "அந்த மாமா என் அம்மாவை அந்த ரூமுக்குள்ள கூட்டிட்டு போனாரு.. அம்மா தலையில் அடிச்சிட்டாரு.. அம்மாவின் புடவையால் கழுத்தையும் நெறிச்சிட்டார்.. மாமா உடனே ஓடிட்டார்" என்று 5 வயது சிறுவனின் வாக்குமூலம் 2 வருடம் கழித்து கொலையாளியை பிடிக்க உதவி உள்ளது.

கர்நாடக மாநிலம் சின்னயனாபால்ய கிராமத்தை சேர்ந்த தம்பதி தேவராஜ் - சுமலதா. இவர்களுக்கு 5 வயது மகன் உள்ளான்.

இந்நிலையில், சுமலதாவுக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அடிக்கடி நெஞ்சு வலி என்றும் சொல்லி வந்தார். ஆனால் போன செப்டம்பர் 18ம் தேதி வீட்டில் இறந்துகிடந்தார். வழக்கமான நெஞ்சுவலியால் தான் சுமலதா இறந்துவிட்டதாக நினைத்து, குடும்பத்தினரும் தகனம் செய்துவிட்டனர்.

தேவராஜ்

தேவராஜ்

இப்போது சுமலதா இறந்து 2 மாசம் ஆன நிலையில், மனைவியை யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் தேவராஜுக்கு எழுந்துள்ளது. 5 வயது பையன், இவரிடம் பேசி கொண்டிருக்கும்போது, "அம்மாவை ஒரு மாமா அந்த ரூமுக்குள் கூட்டிட்டு போய் அடிச்சார்" என்று சொன்னதும் அதிர்ச்சி அடைந்தார் தேவராஜ்... அதனால் மகனையும் அழைத்து கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போய் நடந்ததை சொல்லி உள்ளார். போலீசாரிடம் அந்த சிறுவன் சொன்னதாவது:

புடவை

புடவை

"ஒருநாள் வெங்கடேஷ் மாமா எங்க வீட்டுக்கு வந்தார். அவரும் அம்மாவும் அந்த ரூமுக்குள்ள போனாங்க.. அப்போ ரெண்டு பேரும் சத்தமா சண்டை போட்டுக்கிட்டாங்க.. அந்த மாமா என் அம்மா தலையில் அடிச்சிட்டார்.. அம்மாவின் புடவையால் கழுத்தையும் நெறிச்சிட்டார்.. அம்மா கீழே விழுந்துட்டாங்க.. அந்த மாமா உடனே ஓடிட்டார்" என்றான்.

விசாரணை

விசாரணை

இதை கேட்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். வெங்கடேஷுக்கும் சுமலதாவுக்கும் கள்ள உறவு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் சொன்னார்கள். இதை பற்றி விசாரிக்கலாம் என்றால் வெங்கடேஷை ஊரில் காணோம்.. சுமலதா இறந்தபோதே ஆள் எஸ்.ஆகிவிட்டுள்ளார்.. அதனால், அவரை தீவிரமாக தேட ஆரம்பித்தபிறகு, இப்போது சிக்கிவிட்டார்.. கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

'எனக்கும் சுமலதாவுக்கும் உறவு இருந்தது உண்மைதான்.. ஒரு கட்டத்தில் அதை நிறுத்திக்கலாம்ன்னு சுமலதா என்கிட்ட சொன்னாள்.. ஆனால் நான் ஒத்துக்கலை.. அதனால், வீட்டில் எல்லார்கிட்டயும் சொல்லிவிடுவேன் என அவள் என்னை மிரட்டினாள்.. அந்த ஆத்திரத்தில்தான் அவள் கட்டிய சேலையாலேயே கழுத்தை நெறித்து கொன்றேன். கொலை செய்ற ஆவேசத்தில் பக்கத்தில் பையன் இருக்கிறான் என்பதைகூட நான் கவனிக்கவில்லை" என்றார்.

பெண் உயிரிழந்த 2 மாதம் கழித்து, மகன் தந்த சாட்சிமூலம் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளது பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
5 year old son eye witness for his mother murder and police arrested her illegal husband after 2 years in karnataka
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X