பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடன் தொல்லை.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலையால் பரபரப்பு

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொப்பல் மாவட்டம் மேதகல் கிராமத்தை சேர்ந்தவர் சேகரய்யா. விவசாயி. இவர் விவசாயம் செய்வதற்காக கடன் வாங்கியுள்ளார். விளைச்சல் சரியில்லாத நிலையில் இவரால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

6 people from one family commits suicide in Karnataka

இதனால் இவருக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். மனஉளைச்சலுக்கு ஆளான சேகரய்யா தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி மனைவி, 4 மகள்களுக்கு விஷம் கொடுத்துள்ளார்.

அவர்கள் இறந்தவுடன் சேகரய்யாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
6 people from Karnataka commits suicide after they failed to pay the debts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X