புதருக்குள் கிடந்த சடலம்.. ஆணின் உள்ளாடை.. குடிகார எல்லப்பாவை கைது செய்த போலீஸ்!
8 வயது சிறுமியை நாசம் செய்து கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்
பெங்களூரு: "சாக்லட் வாங்கி தர்ரேன்னு சொன்னதுமே, என் பின்னாடியே வந்துட்டாள்.. அப்பறம் அந்த புதர் மறைவில் வைத்து 8 வயது சிறுமியை நாசம் செய்து, கொலை செய்தேன்" என்று குடிகார எல்லப்பா வாக்குமூலம் தந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் கல்புர்கி அருகே உள்ள கிராமம் யாகாபுரம். இங்கு சில தினங்களுக்கு முன்பு, ஸ்கூலுக்கு போன 8 வயது சிறுமி ஒருத்தி காணாமல் போய்விட்டாள். இதனால், பதறி போன சிறுமியின் பெற்றோர் ஸ்கூலுக்கு போய் விசாரித்தனர். ஆனால், அன்று குழந்தை வரவேயில்லை என்று பள்ளி நிர்வாகத்தினர் சொல்லிவிட்டனர். இதற்கு பிறகுதான் போலீசில் புகார் தந்தனர்.
போலீசாரும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு, காணாமல் போன குழந்தையை தேடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த ஒரு புதர் அருகே மாயமான சிறுமியின் டிரஸ் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவும், அங்கே சென்று தீவிரமாக தேடினர்.
அப்போதுதான் அந்த புதருக்குள் சிறுமியின் சடலத்தை கண்டு அதிர்ந்தனர். உடம்பெல்லாம் சிறுமிக்கு காயமாக இருந்தது. மேலும் அதே இடத்தில் ஒரு ஆணின் உள்ளாடை இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். அவைகளை கைப்பற்றிய போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.
அப்போது, 34 வயதுடைய எல்லப்பா என்பவர், குழந்தையை அந்த பக்கமாக கூட்டி சென்றதை பார்த்தோம் என்று சிலர் சொன்னார்கள். இதையடுத்து, போலீசார், எல்லப்பாவின் வீட்டுக்கு சென்றனர். அங்கு எல்லப்பா மதுபோதையில் கிடந்தார்.. அவர் டிரஸ் எல்லாம் ரத்த கறை இருந்தது.
அங்கேயே உடனடியாக அவரை கைது செய்த போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது எல்லப்பா சொன்னதாவது: "ஸ்கூலுக்கு போய்ட்டு இருந்த சிறுமியை நான்தான் கூப்பிட்டேன்.. சாக்லட் வாங்கி தருவதாக சொல்லவும், என் பின்னாடியே வந்துவிட்டாள். அதுக்கப்பறம்தான் மறைவான புதரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலையும் செய்தேன்" என்றார்.