மோடியின் ஹெலிகாப்டரில் மர்ம பெட்டி.. வேகமாக தூக்கிக்கொண்டு ஓடிய வெடிகுண்டு நிபுணர்கள்.. திக் வீடியோ
பிரதமர் மோடியின் தனி ஹெலிகாப்டரில் இருந்த கருப்பு நிற பெரிய மர்ம பெட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்: பிரதமர் மோடியின் தனி ஹெலிகாப்டரில் இருந்த கருப்பு நிற பெரிய மர்ம பெட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெட்டி குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லோக்சபா தேர்தலுக்காக கடந்த ஒரு மாதமாக பிரதமர் மோடி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று பெங்களூரில் பிரச்சாரம் செய்தார்.
அவர் பிரச்சாரத்திற்காக பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் இந்த கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
5 வருட பாஜக ஆட்சியில் தீவிரவாத தாக்குதலே நடக்கவில்லை.. நாடு அமைதியாக உள்ளது.. மோடி பெருமிதம்!
என்ன ஆனாலும்
நேற்று பிரதமர் மோடி பிரச்சாரத்திற்காக கர்நாடகா வந்தார். அப்போது பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து பிரச்சார சாதனை பொருட்கள் இறக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த பாதுகாப்பு படையின் நாய் ஒன்று, பெரிய கருப்பு நிற பெட்டியை கண்டுபிடித்தது.
என்ன பெட்டி
இந்த கருப்பு நிற பெட்டி ஹெலிகாப்டரில் துணி போட்டு மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த பெட்டியை பார்த்ததும் போலீசார் அதிர்ந்து போனார்கள். அங்கு ஏற்கனவே வெடிகுண்டு நிபுணர் குழு ஒன்று பாதுகாப்பிற்காக நின்று கொண்டு இருந்தது. இந்த வெடிகுண்டு நிபுணர் குழு வேகமாக அந்த பெட்டியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள்.
படுவேகம்
வேகமாக அதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து அந்த பெட்டியை தூக்கிக் கொண்டு சென்றனர். மோடியின் பிரச்சாரம் நடக்கும் இடத்தில் இருந்து சில மீட்டர்கள் தூரம் தள்ளி தூக்கி சென்று, பெட்டியை சோதனை செய்தார்கள். இந்த சம்பவத்தால் அங்கே பெரிய பரபரப்பு நிலவியது.
|
என்ன விசாரணை
தற்போது போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள். அந்த பெட்டி ஹெலிகாப்டர் உள்ளே எப்படி வந்தது என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.