மைன்ட் ட்ரீ நிறுவன பங்குகளை விற்பனை செய்ததில் மிரட்டப்பட்டாரா 'காபிடே' சித்தார்த்தா?
Recommended Video
பெங்களூரு: மைன்ட் ட்ரீ நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்த விவகாரத்தில் காபிடே நிறுவனர் சித்தார்த்தா மிரட்டப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
காபிடே நிறுவனரும் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா நேற்று முதல் காணாமல் போனார். அவர் நிறுவன ஊழியர்களுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அதில் மைன்ட் ட்ரீ நிறுவன பங்குகள் விவகாரத்தில் தம்மை வருமான வரித்துறை மாஜி அதிகாரி ஒருவர் சித்ரவதை செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக நாம் விசாரித்த போது, மைன்ட்ரி எனும் ஐடி நிறுவனத்தில் சித்தார்த்தா மற்றும் அவரது பங்குதாரர்களுக்கு 40% பங்குகள் இருந்துள்ளன.
இதில் 25% பங்குகளை சித்தார்த்தா அண்மையில் தன்னிச்சையாக விற்பனை செய்துள்ளார். இதுதான் பிரச்சனையின் தொடக்கம் என்கின்றனர்.
மைன்ட் ட்ரீ நிறுவனப் பங்குகள் விற்பனை விவகாரத்தில்தான் சித்தார்த்தா வருமான வரித்துறை அதிகாரிகளால் மிரட்டப்பட்டு மன உளைச்சலுக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கிப்படுகிறது.