மீடூ புகார்.. அர்ஜூன் செம சூடாக இறங்கி விட்டார்.. ஆனால் தமிழ்நாடு மகா அமைதியா இருக்கே!
தன் மீதான புகார்களை ரத்து செய்ய நடிகர் அர்ஜூன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
Recommended Video
பெங்களூரு: தன் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் சம்பந்தப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் அர்ஜூன் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.
இதுவரை அளிக்கப்பட்டுள்ள மீ டூ விவகாரங்களில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் சம்பந்தப்பட்ட புகார் மீது தான் அடுத்தடுத்து நடவடிக்கை உடனடியாக நடந்து வருகிறது. நிபுணன் படத்தில் நடித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஸ்ருதி ஹரிகரன், நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் அளித்தார். இது கர்நாடகம், தமிழகம் என இரு மாநிலங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக இதுகுறித்து அர்ஜுன் மறுப்பு தெரிவித்தார்.
பெட்ரோல்-டீசல் விலையை குறைத்து.. சிலிண்டர் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனம்!.. சென்னை விலை என்ன?
மான நஷ்ட வழக்கு
இருந்தாலும், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இரு தரப்பையும் அழைத்து பேசுகிறோம் என சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் கூட்டத்தில் பேசிய அர்ஜூன், "நான் சமசரம் செய்து கொள்ள மாட்டேன், என் மீது அவர் எப்படி பாலியல் புகார் அளிக்கலாம்? ரூ.5 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போகிறேன்" என்று சொல்லிவிட்டு, அது சம்பந்தமான நீதிமன்ற பணிகளிலும் அதிரடியாக இறங்கினார்.
4 பிரிவுகளில் வழக்கு
இது ஒரு பக்கம் என்றால், ஸ்ருதி ஹரிஹரன் நேராக பெங்களூரு போலீசில் போய் நடிகர் அர்ஜூன் மீது புகார் அளித்தார். அதன்பேரில் பாலியல் துன்புறுத்தல், பெண்களை அவதூறு செய்வது, மிரட்டல், பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதத்தில் நடப்பது என்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் அர்ஜூன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஐகோர்ட்டில் மனு
இந்த வழக்கு சம்பந்தமாக அர்ஜூன் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனையும் நடத்தினார். இதையடுத்து தன் மீதுதொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் அர்ஜுன் மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, அர்ஜூனின் வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவும் நேற்று கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
நாளை விசாரணை
அதில், அர்ஜூன் மீதான பாலியல் புகார் வழக்கை நேற்றைய தினமே விசாரிக்க வேண்டும் என்றார். அதற்கு நீதிபதி தினேஷ்குமார், விசாரணையை நாளை (2-ம் தேதி) நடத்துகிறேன் என்று அறிவித்தார். இதையடுத்து இந்த விசாரணை நாளை நடைபெற உள்ளது. ஒரு பக்கம் ஸ்ருதியும், மற்றொரு பக்கம் அர்ஜூனும் மாறி மாறி புகார்களை சொல்லி வருகின்றனர். காவல்துறையும், நீதித்துறையும் இந்த விவகாரங்களை சூடாக விசாரித்தும் வருவதால் கன்னட சினிமாவில் பரபரப்பு தொற்றிக் கொண்டே இருக்கிறது.
ஆதாரம் தேடுகிறார்
ஆனால் நம் மாநிலத்தில் மீ டூ புகார் தொடர்பாக ஒரு முன்னேற்றத்தையும் காணோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒருவர் தொடர்ந்துள்ளார், இன்னொருவர் வழக்கை தொடர போகிறேன் என்று மட்டும் சொல்லி இருக்கிறார். ஆனால் புகார் அளித்த முக்கியமும் மூலமுமானவர் இன்னமும் ஆதாரத்தை தேடறார்.. தேடறார்.. தேடிக் கொண்டே இருக்கிறார்!!!