பெங்களூர் கலவரம்.. சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு.. எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் கைது!
பெங்களூர்: பெங்களூரில் நேற்று இரவு காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் வீடு முன் கலவரம் ஏற்பட்ட நிலையில் சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
பெங்களூரில் நேற்று கலவரம் ஏற்பட்ட நிலையில், தற்போது பெங்களூர் முழுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அங்கு புலிகேசி நகர் பகுதியில் இருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு முன் கலவரம் நடந்தது.
காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் செய்த பேஸ்புக் பதிவுதான் இந்த கலவரத்திற்கு காரணமாகும். இவர் இஸ்லாம் குறித்தும் முகமது நபி குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இவருக்கு எதிராக சீனிவாச மூர்த்தியின் வீடு முன் நேற்று இரவு பெரிய கலவரம் நடந்தது. அதேபோல் நவீனுக்கு எதிராக கலவரக்காரர்கள் கொடுத்த புகாரை போலீசார் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் புகார் உள்ளது. இதனால் நேற்று பெங்களூர் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
பெங்களூர் கலவரம்.. 110 பேர் கைது.. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.. கமிஷ்னர் அதிரடி உத்தரவு!
இந்த கலவரத்தில் ஈடுப்பட்ட நபர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் தற்போது சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னுடைய பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று நவீன் தற்போது போலீசில் விளக்கம் அளித்துள்ளார்.