ராஜபக்ஷே வருகைக்கு எதிர்ப்பு.. பெங்களூரில் கொந்தளித்த தமிழ் அமைப்புகள்
Recommended Video
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு வருகை தந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையை தலைமையிடமாக கொண்ட பிரபல ஆங்கில நாளிதழ் பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை ராஜபக்ஷே பெங்களூர் வந்தார். இதையறிந்த தமிழ் ஆர்வலர்களும், மே 17 இயக்கம் போன்ற அமைப்பினரும், 'கோ பேக் ராஜபக்ஷே' என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
இதுபற்றி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், குறிப்பிட்ட அந்த பத்திரிகை அதிபர், தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் நடந்து வருபவர். இலங்கை அரசு செய்த கொடுமைகளை அவரது நாளிதழ்களில் வெளியிடுவதில்லை.. இப்போது, ராஜபக்ஷேவை இந்திய மண்ணுக்கு அழைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு-கர்நாடக வாழ்தமிழர்கள் போராட்டம் #ProtestAgainstRajapaksa #Rajapaksa pic.twitter.com/4N7jnSstw2
— Oneindia Tamil (@thatsTamil) February 9, 2019