கொரோனா இருக்கு கிளம்புங்க.. ஆம்புலன்ஸில் போன இளம் பெண் மாயம்.. உறவினர்கள் ஷாக்
பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா இருப்பதாக ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட பெண் மாயமான சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் ப்ரோமஹஹள்ளியில் வசிக்கும் 28 வயது பெண் சங்கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கொரோனா உள்ளதா என்பதை கண்டறியும் வீட்டுக்கு வீடு சோதனை நடத்தும் 4 பேர் குழுவுக்கு தனது சளி மாதிரிகளை சங்கீதா கொடுத்ததாக கூறப்டுகிறது.
ஆனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படவில்லை. அவர் 4 நான்கு நாட்களாக எங்கு இருக்கிறார் என்றே உறவினர்களுக்கு தெரியவில்லை. இதுதொடர்பாக . சங்கீதாவின் மைத்துனர் விகாஸ் கூறும் போது, செப்டம்பர் 3 மதியம், பிபிஇயில் இருந்து நான்கு பேர் கொரோனா சோதனையை நடத்துவதாகக் கூறி எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்களின் மாதிரிகள் மற்றும் அக்கம் பக்கத்தினரின் மாதிரிகளை எடுத்துக் கொண்டனர்.
விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்.. முன்னாள் சிஏஜி உள்பட 4 அதிகாரிகள் வழக்கு தொடர அனுமதி கோரும் சிபிஐ
செல்போன் கூடாது
ஆனால் மறுநாள், இரண்டு பேர் ஆம்புலன்சில் வந்து, என் அண்ணியை கோவிட் பாசிட்டிவ் என்று சொல்லி பிரசாந்த் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று அழைத்தார்கள். ஆனால் மருத்துவமனைக்குள் அனுமதி இல்லை என்று கூறி அண்ணியின் தொலைபேசியை எடுக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. அவர்கள் என்னையும் என் மச்சானையும் பின்னர் மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது, சங்கீதா (என் அண்ணி) என்ற நோயாளி இல்லை என்று அவர்கள் சொன்னார்கள்
மறுத்த அதிகாரிகள்
"நாங்கள் பிபிஎம்பி ஹெல்ப்லைனை அழைத்தோம், எங்கள் பகுதியில் வீட்டுக்கு வீடு சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்றும் சங்கீதா என்ற நேர்மறையான நோயாளி இல்லை என்றும் கூறினார். இன்றுடன் நான்கு நாட்களாகிவிட்டது, என் அண்ணியை இன்னும் காணவில்லை "என்றார் விகாஸ்.
போலீஸ் விசாரணை
சங்கீதாவின் கணவர் பெங்களூரு போமன்ஹள்ளி காவல் நிலையத்தில் தன் மனைவி காணாமல் போனது குறீத்து புகார் அளித்தார். இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் "அந்தப் பெண் கண்டுபிடிக்கப்படவில்லை, நாங்கள் இன்னும் விசாரித்து வருகிறோம்" என்றார். இதனிடையே. பொம்மனஹள்ளி மண்டலத்தைச் சேர்ந்த பிபிஎம்பி அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆம்புலன்ஸ் பிபிஎம்பியிலிருந்து வந்தத அல்ல, நாங்கள் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை.
Recommended Video
அதிகாரி விளக்கம்
நோயாளிக்கு எஸ்எம்எஸ் அனுப்பாமல், ஆம்புலன்ஸ் டிரைவர், தொலைபேசி எண் போன்ற விவரங்களைத் தராமல் ஆம்புலன்சில் ஒரு நோயாளியை நாங்கள் பரிசோதிக்கவோ அழைத்துச் செல்லவோ மாட்டோம். எங்கள் ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டிருக்கும், அவற்றை இறுதிவரை கண்காணிக்கிறோம். எனவே இவர்கள் சொல்வது தனியார் ஆம்புலன்ஸ். இதில் என்ன நடந்தது என்பது பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள் என்றார்.