நாங்க 80%.. நீங்க 17%தான்.. இறங்குனா என்னாகும் தெரியுமா.. முஸ்லீம்களை மிரட்டிய பாஜக எம்எல்ஏ
பெங்களூர்: நாங்கள் 80 சதவீதம் பேர் இருக்கோம். சிறுபான்மையினராகிய நீங்கள் வெறும் 17 சதவீதம்தான், உங்களுக்கு எதிராக நாங்கள் திரும்பி வீதிக்கு வந்தால் என்னவாகும்னு கற்பனை செய்து பாருங்கள் என கர்நாடக பாஜக எம்எல்ஏ சோமசேகர ரெட்டி மிரட்டும் தொனியில் பேசினார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குடியுரிமை சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சட்டம் குறித்து பாஜக சார்பில் விளக்கம் அளித்தும், அதை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்துள்ளனர். பெல்லாரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ சோமசேகர ரெட்டி பேசினார்.
ஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்
17 சதவீதம்
அப்போது அவர் கூறுகையில் நாங்கள் 80 சதவீதம் பேர் இருக்கிறோம். நீங்களோ வெறும் 17 சதவீதம்தான். நாங்கள் உங்களுக்கு எதிராக திரும்பினால் என்னவாகும் என கற்பனை செய்யுங்கள். இது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுவோருக்கு எனது எச்சரிக்கை.
களத்திற்கு வருவோம்
இந்த போராட்டக் களத்தில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே இருக்கிறீர்கள். மேலும் மேலும் பிரச்சினையை பெரிதாக்கி இடையூறு செய்தால், முற்பட்ட வகுப்பை சேர்ந்த 100 சதவீதம் பேர் போராட்டக் களத்திற்கு வருவோம். அப்படி வந்தால் என்னவாகும் உங்களுக்கு?
எச்சரிக்கை
போராடும் மக்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்து 5 மாதங்களே ஆகிறது. இது போன்று நாடகங்களை நடத்தினால் அவ்வளவுதான் என மிரட்டும் தொனியில் பேசினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா எம்எல்ஏ சோமசேகருக்கு எதிராக பெங்களூரில் உள்ள மாநில டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ரெட்டிக்கு எதிராக வழக்கு பதிவு
அதில் ஜாதி கலவரத்தைத் தூண்டுவிடும் வகையில் பேசிய சோமசேகர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து மத கலவரத்தை தூண்டிவிடும் வகையில் பேசிய ரெட்டிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.