பெங்களூரில் காங். எம்எல்ஏ வீட்டருகே குண்டுவெடிப்பு.. இளைஞர் ஒருவர் பலி!
பெங்களூரில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார்.
பெங்களூர்: பெங்களூரில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பில் இளைஞர் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள வியாலிகாவல் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த குண்டு தரையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்ததாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த குண்டு வெடித்த பகுதிக்கு அருகில்தான் காங்கிரஸ் எம்எல்ஏ முனிரத்தனா வீடும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குண்டு வெடித்த நேரத்தில் அந்த பகுதி வழியாக சென்று கொண்டு இருந்த வெங்கடேஷ் என்ற இளைஞர் அதில் சிக்கி பலியானார்.
இந்த சம்பவத்தை அடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு எப்படி நிகழ்ந்தது, யார் காரணம், பின்புலம் என்ன என்பது குறித்த எந்த விவரமும் இன்னும் வெளியாகவில்லை.
இதுகுறித்த விசாரணை மட்டும் தற்போது நடந்து வருகிறது. குண்டுவெடிப்பிற்கும் இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டு வெடிப்பு காரணமாக காங்கிரஸ் எம்எல்ஏ முனிரத்தனா வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.