பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாலத்திலிருந்து ஒருவர் விழுந்தார்.. போலீசுக்கு ஷாக் தந்த சாட்சியம்.. சித்தார்த் மாயத்தில் பரபரப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Coffee Day Owner V. G. Siddhartha Missing : முன்னாள் முதல்வர் எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகன் மாயம்

    பெங்களூர்: சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் காணாமல் போன வழக்கில் முக்கிய சாட்சியம் ஒன்று போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் நேற்று மாலை காணாமல் போனார். அவர் காணாமல் போனாரா, தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் இன்னும் நிலவி வருகிறது.

    மிக வெற்றிகரமாக இயங்கி வந்த கஃபே காபி டே நிறுவனத்தின் நிறுவனர் விஜி சித்தார்த் நேற்று மங்களூர் அருகே காணாமல் போனார். இவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    எல்லாம் சரி.. முக்கிய விஷயத்தை போலீஸ் மறைப்பது ஏன்? சித்தார்த் மாயத்திற்கு பின்னிருக்கும் மர்மம்! எல்லாம் சரி.. முக்கிய விஷயத்தை போலீஸ் மறைப்பது ஏன்? சித்தார்த் மாயத்திற்கு பின்னிருக்கும் மர்மம்!

    எங்கு காணாமல் போனார்

    எங்கு காணாமல் போனார்

    மங்களூர் அருகே இருக்கும் ஜெப்பினா மோகரூ பகுதியில் உள்ள உல்லால் பாலத்திற்கு அருகில்தான் விஜி சித்தார்த் காணாமல் போனார். நேற்று இரவு 8 மணிக்கு இவர் காணாமல் போனார். ஆனால் இன்னும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    தற்கொலை எண்ணம்

    தற்கொலை எண்ணம்

    இவர் கடிதத்தை பார்க்கும் பொழுது, இவர் தற்கொலை செய்து இருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவிக்கிறார்கள். உல்லால் பாலத்திற்கு கீழ் இருக்கும் நேத்ராவதி ஆற்றில் இவர் விழுந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால்தான் தற்போது அங்கு மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    என்ன ஷாக்

    என்ன ஷாக்

    இந்த நிலையில் நேற்று இரவு உல்லால் பாலத்தில் இருந்து கீழே ஒருவர் விழுந்தார் என்று போலீசுக்கு நேரடி சாட்சியம் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதாவது, அவர் அந்த வழியாக நடந்து சென்ற போது, நடுத்தர வயது நபர் ஒருவர் பாலத்தின் மேல் ஏறி நின்றார். அவர் கீழே விழுவதை பார்த்தேன் என்று சாட்சியம் அளித்த நபர் கூறியுள்ளார்.

    மோசம்

    மோசம்

    இதனால் அந்த நடுத்தர வயது நபர் சித்தார்த்தாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஆகவே தற்போது நேத்ராவதி ஆற்றில் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள். இந்த தகவல் தற்போது சித்தார்த் உறவினர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    English summary
    Police got a shocking eye witness report that someone had jumped off the Ullal bridge.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X