ஆளுநர் மாளிகையில் 'ராஜினாமா' எம்.எல்.ஏக்கள்- சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தல்
பெங்களூரு: கர்நாடகா ஆளுநர் வஜூபாயை ஜேடிஎஸ்- காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேர் கூட்டாக சந்தித்து பேசினர். அப்போது சட்டசபையில் முதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற உதவும் வகையில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 13 பேர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். ஆனால் சட்டசபைக்கு சபாநாயகர் வரவில்லை.
அதனால் சட்டசபை செயலாளரிடம் ஜேடிஎஸ்-காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து கர்நாடகா ஆளுநர் வஜூபாயை இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது முதல்வர் குமாரசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.
English summary
Congress-JDSMLAs who stepped out of the Karnataka Speaker office reached Raj Bhavan and met Governor Vajubhai Vala.
Story first published: Saturday, July 6, 2019, 16:15 [IST]