பெங்களூரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. அமலுக்கு வந்த 33 மணி நேர தீவிர லாக்டவுன்!
பெங்களூர்: பெங்களூரில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் 33 மணி நேர தீவிர லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது.
பெங்களூரில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1172 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் மொத்தமாக 42 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 21,459 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 1,839 பேர் இன்று மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில் கொரோனா கேஸ்கள் கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் பெங்களூரில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் 33 மணி நேர தீவிர லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது.
தீயாய் பரவும் கொரோனா.. மதுரையில் மீண்டும் லாக்டவுன்.. மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு.. முதல்வர் அதிரடி!
சனிக்கிழமை மாலை 8 மணிக்கு இந்த முழு லாக்டவுன் அமலுக்கு வந்தது. திங்கள் கிழமை காலை 5 மணி வரை இந்த லாக்டவுன் அமலில் இருக்கும். இந்த முழு லாக்டவுன் கடும் கட்டுப்பாட்டுடன் அமலில் இருக்கும்.
Recommended Video
அடிப்படை அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.