சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்.. ஹூப்ளி கோயிலுக்கு வண்டியை திருப்பும் பக்தர்கள்
பெங்களூர்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹூப்ளியில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயில் லாக்டவுனுக்கு பிறகு திறந்தாலும் அங்கு ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டு வந்தார்கள். சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் 2000 பேர் என அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது ஒரு நாளைக்கு 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். எனினும் கொரோனா இல்லை என்று 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கெடுபிடிகளால் பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
பாஜக இல்லாவிட்டால் தமிழக அரசியலே கிடையாதா?.. முருகன் சொல்வது சரியா??
சிலருக்கு சபரிமலை செல்வதற்கான அனுமதி சீட்டும் கிடைக்க பெறுவதில்லை. இதை கருத்தில் கொண்டு சபரிமலைக்கு செல்ல வேண்டிய பக்தர்கள் கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் ஷிரூர் பார்க்கில் உள்ள ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இதனால் அந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கடந்த காலங்களை காட்டிலும் தற்போது பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தேவஸ்தானம் கூறுகிறது.